Home சினிமா இன்னும் 25 வருடங்களுக்குப் பிறகு யார் வீட்டிலும் அரிசி இருக்காது; விவசாயம் அழிந்து விடும்! -நாகரீகப்...

இன்னும் 25 வருடங்களுக்குப் பிறகு யார் வீட்டிலும் அரிசி இருக்காது; விவசாயம் அழிந்து விடும்! -நாகரீகப் பயணம் பட விழாவில் தயாரிப்பாளர் ஜாகிர் உசேன் பேச்சு

தாஸ் சடைக்காரன் இயக்கியுள்ள ‘நாகரிகப் பயணம்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் உள்ள பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் பி.மணவாளவன் ஏ.செந்தில், புதுவை எம்.ஜாகீர் உசேன், இயக்குநர் ராதா பாரதி, ஃபைட் மாஸ்டர் ஜாகுவர் தங்கம், தயாரிப்பாளர் ஈகை கருணாகரன் இசை அமைப்பாளர் திவாகர், காண்டியப்பன், அன்னக்கொடி கன்னன, வர்ணிகா, முபாரக் அலி, ரஜினிகாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் ஜாகிர் உசேன், ”இன்னும் 25 வருடங்கள் பிறகு எல்லார் வீட்டிலும் அனைத்து பொருட்களும் இருக்கும் ஆனால் அரிசி இருக்காது , ஏனென்றால் விவசாயம் அழிந்து விடும் நிலையில் உள்ளது, விவசாயத்தை சார்ந்த திரைப்படம் எடுக்கலாம் என்று இயக்குநர் தாஸ் சடைக்காரன் என்னிடம் கூறினார், ஆதலால் நாங்கள் இருவரும் சேர்ந்து இத்திரைப்படம் எடுத்துள்ளோம்” என்றார்.

இயக்குநர் தாஸ் சடைக்காரன் ”இப்படம் 40 நாட்கள் கடின உழைப்பில் எடுத்துள்ளோம்,மக்கள் அனைவரும் ஆதரவு தாருங்கள். வந்திருந்த அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்