Home சினிமா பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளில் மாபெரும் இசை நிகழ்ச்சி! ஜூலை 5-ம் தேதி சென்னையில்...

பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளில் மாபெரும் இசை நிகழ்ச்சி! ஜூலை 5-ம் தேதி சென்னையில் நடக்கிறது!

தமிழ் சினிமா பாடல்களை தனது எழுத்துக்களால் இலக்கியமாக்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளில், அவர் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் திரையிசைப் பாடல்களுக்கும் ஆற்றிய ஈடு இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக மாபெரும் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகிறது.

நிகழ்வை நா.முத்துக்குமார் Welfare core கமிட்டியோடு இணைந்து ACTC நிறுவனம் பிரம்மாண்டமாக நடத்தவிருக்கிறது.

தனது எழுத்தால் ஒரு தலைமுறைக்கே காதலையும், ஆறுதல்களையும், நம்பிக்கைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கும். அழியா புகழ் கொண்ட இந்த மாபெரும் கவிஞனுக்கு மரியாதை செய்யும் விதமாக, நா முத்துக்குமாரின் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களும் பங்கேற்கும் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக இது அமையவிருக்கிறது.

வீசும் காற்று முழுக்க, தன் கவிதைகளை பாடல்களாக கலந்திட வைத்திருக்கும் இந்த கலைஞனோடு தங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத நிகழ்வுகளையும், பணியாற்றிய நினைவுகளையும் ரசிகர்களிடம் பகிர நா.முத்துக்குமாரோடு பணியாற்றிய திரை பிரபலங்களும் நண்பர்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.

திரையிசைப் பாடல்களில் தனக்கென தனி முத்திரையை பதித்ததோடு, கோடானு கோடி இரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்திருக்கும் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாள்

நிகழ்ச்சி வரும் ஜூலை 5; 2025 அன்று சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடக்கவுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: www.actcevents.com

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்