மாணவர்கள் மனதில் அறக் கருத்துகளை விதைக்க பாடநூல்களில் திருவருட்பாவை சேர்க்க வேண்டும்! -தமிழ்நாடு அரசுக்கு பரம்பொருள் அறக்கட்டளை வேண்டுகோள்

பரம்பொருள் அறக்கட்டளை‘ எனும் சமூகத் தொண்டு நிறுவனம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்திலிருந்து செயல்படுகிறது. குருஜி மஹாவிஷ்ணு நடத்திவரும் இந்த அறக்கட்டளை மூலம், தினமும் 300 நபர்களுக்கு மதிய உணவு வழங்குதல், ஏழை எளிய மாணாக்கர்களின் கல்விக்கு உதவுதல், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு நிதியுதவி, அரசுப் பள்ளி கட்டடங்களைச் சீரமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி செய்தல் உள்ளிட்ட பல்வேறு அறப்பணிகள் நிறைவேற்றப்படுகிறது.இந்த நிலையில் குருஜி மஹாவிஷ்ணு, பள்ளிக் குழந்தைகள் உள்ளத்தில் அறக் கருத்துகளை விதைக்கும் நோக்கத்தில், தமிழகப் பாடநூல்களில் வள்ளலார் இயற்றிய ‘திருவருட்பா’வை சேர்க்கவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்காக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களையும், தமிழ்நாடு பாடநூல்கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி அவர்களையும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களையும் சந்தித்து மனுகொடுத்து இது தொடர்பாகப் பேசி, கோரிக்கை வைத்தார்.அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி்.கே.சேகர்பாபு அவர்களையும், அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து மனுகொடுத்து, அதற்கான ஆயத்தப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டுமாறு கோரிக்கை வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here