இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் சசிகுமார் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். உதயநிதி ஸ்டாலின் நடித்த இது ‘கதிர்வேலன் காதல்’, விக்ரம் பிரபு நடித்த ‘சத்ரியன்’, சசிகுமார் நடித்த ‘கொம்பு வெச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களை இயக்கியவர்.
அவர் இப்போது தயாரிப்பாளராகி, தனது பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தொடங்கி முதல் தயாரிப்பாக ‘றெக்கை முளைத்தேன்‘ என்ற படத்தை இயக்கியுள்ளார்.கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். அவருடன் ஜெயப்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன், போஸ் வெங்கட், ஜீவா ரவி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், மற்றும் சுவாதிஸ், பிரபா, மெர்லின், நிதிஷா எனும் நான்கு புதுமுகங்களையும் அறிமுகம் செய்துள்ளார்.
இதுவரை நண்பர்கள், காதல் என்று குடும்பங்கள் கொண்டாடும் படமாக எடுத்து வந்த எஸ். ஆர். பிரபாகரன் இந்த படத்தை க்ரைம் த்ரில்லர் படமாக இயக்கியுள்ளார்.
காட்சிகள் சென்னை, மூணார், தேக்கடி, வாகமண் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக உருவாகியுள்ளது.
இந்த படத்தின் தலைப்பை இயக்குநரும் நடிகருமான சசிகுமார் வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் சமுத்திரகனி, கார்த்திக் சுப்புராஜ், நடிகர் சூரி, நடிகை மடோனாசெபாஸ்டின் அகியோர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநரிடம் பேசியபோது, ”இதுவரை கதாநாயகனை முன்னிலைப்படுத்தி படங்கள் எடுத்து வந்தேன். ஆனால் ஒரு எழுத்தாளராக நல்ல கருத்துள்ள கதைகளை கதாநாயகர்களை மையப்படுத்திய படங்களில் சொல்ல முடியவில்லை. நல்ல கதைகளை தொடர்ந்து கமர்ஷியலாக பதிவுசெய்ய விரும்புகிறேன் அதற்காகத்தான் இந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நல்ல கதைகளையும் நிறைய புதுமுக இயக்குநர்களையும் எனது தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகப்படுத்த உள்ளேன்” என்றார்.
படக்குழு:-
ஒளிப்பதிவு – கணேஷ் சந்தானம்
இசை – தீசன்
எடிட்டிங் – டான் பாஸ்கோ
கலை – பிரேம்
பாடல்கள் – கார்த்திக் நேத்தா, ஆ.பா.ராஜா
நடனம் – நந்தா
மக்கள் தொடர்பு – ஷேக்
விளம்பர உதவி- ரியாஸ்