ரஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, காதல் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகவுள்ளது ‘ரெயின்போ.’
தனது அடுத்த தயாரிப்பு ‘ரெயின்போ’ திரைப்படத்தை அறிவித்துள்ளது. நடிகை ரஷ்மிகா மந்தனா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, ஃபேண்டஸி கலந்த காதல் திரைப்படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தை ‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ என தனித்துவமான கதைக்களம் கொண்ட படங்களைத் தயாரித்த எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு இணைந்து தங்களது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பு ஏப்ரல் 7-ம் தேதி ஆரம்பமாகிறது.
சாந்தரூபன் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் தேவ் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
படம் குறித்து ரஷ்மிகா கருத்து தெரிவித்தபோது, “ஒரு பெண் கதாபாத்திரத்தின் பார்வையில் சொல்லப்படும் கதையில் முதல் முறையாகப் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்துக்குத் திரையில் உயிர் கொடுக்க ஆவலாக இருக்கிறேன். உங்களை பொழுதுபோக்கும், ஆச்சரியப்படுத்தும் ஒரு படமாக ரெயின்போ இருக்கும். அந்தப் பெண் கதாபாத்திரத்துடனான ரசிகர்களின் பயணம் உற்சாகமானதாக இருக்கப் போகிறது. அதற்குத் தயாராகுங்கள்” என்றார்.
இயக்குநர் சாந்தரூபன், “இதுவரை இந்திய சினிமா பார்த்திராத ஒரு காதல் ஃபேண்டஸி கதையாக ‘ரெயின்போ’ இருக்கும். ராஷ்மிகாவின் வேறொரு பரிமாண நடிப்பை பார்ப்பீர்கள். புதுமையான கதைக்களம் கண்டிப்பாகப் படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஆச்சரியப்படுத்தும்” என்றார்.
தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு “இந்த படம் வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதத்தில் உருவாகவிருக்கிறது. நாங்கள் தயாரிக்கும் படங்களுக்கு பெரியளவில் ஆதரவளித்து வரும் ரசிகர்கள், ‘ரெயின்போ’வையும் அதே அளவு ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். படத்தின் இணைந்துள்ள நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இதை சாத்தியமாக்குவார்கள்” என்றார்.
படக்குழு:-
தயாரிப்பு: ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர். பிரபு
இசை – ஜஸ்டின் பிரபாகரன்
ஒளிப்பதிவு – கே எம் பாஸ்கரன்
தயாரிப்பு வடிவமைப்பாளர் – தேசிய விருது பெற்ற பங்களான்