ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். அம்பேத்குமார் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘ரேக்ளா’.
‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தை, ‘வால்டர்’ பட இயக்குநர் அன்பு இயக்குகிறார். பிரபுதேவா நடிக்கும் 58-வது படம் இது.
ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. படப்பிடிப்பை இயக்குநர் மிஷ்கின் கிளாப் அடித்து, தொடங்கி வைத்து வாழ்த்தினார்.
விழாவில் தயாரிப்பாளர்கள் ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன், சி. வி. குமார், ராக்ஃபோர்ட் முருகானந்தம், இயக்குநர்கள் மனோஜ், தாஸ் ராமசாமி மற்றும் கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.