‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி,இயக்குநர் பூரி ஜெகன்னாத் இணையும் படத்தில் கைகோர்த்த ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய்குமார்!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கும் புதிய பான் இந்திய திரைப்படம் இந்திய சினிமாவின் கவனத்தை கவரும் விதத்தில் தயாராகிறது. நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தற்போது இந்த படத்தில் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய்குமார் இணைந்திருக்கிறார். ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் படம் இது.‌ இவர் திரை தோற்றத்திலும் தரமான நடிப்பிலும் பெயர் பெற்றவர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

விஜய் சேதுபதி அவருடைய திரையுலக பயணத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறார். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தின் மூலம் நடிகை தபு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிக்கிறார். இவர்களுடன் விஜய் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான இவர் .. தன்னுடைய புதிய தோற்றத்தில் மின்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதால் பல அற்புதமான தருணங்களை எதிர்பார்க்கலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here