பிரபல மலையாள நடிகர்கள் நாய்களுக்கு குரல் கொடுத்து உருவான ‘வளட்டி – ஏ டேல் ஆஃப் டெயில்ஸ்.’ குழந்தைகளின் உலகை குதூகலமாக்க ஜூலை மாதம் தியேட்டர்களில்.

பிரபல மலையாள நடிகர்கள் ரோஷன் மேத்யூ, சௌபின் ஷாஹிர், இந்திரன்ஸ், சன்னி வெய்ன், சைஜு குருப் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நாய் கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்துள்ள படம் ‘வளட்டி – ஏ டேல் ஆஃப் டெயில்ஸ்.’ (VALATTY – A Tale of Tails)

நம் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் இணைந்து ஒரு சாகச பயணத்தில் ஈடுபடும் கதையைச் சொல்லும், இதயம் வருடும் படைப்பாக, இந்திய சினிமாவில் முதன் முறையாக செல்லப் பிராணிகள், தங்கள் உலகிற்குள் மனிதர்களை அழைத்துச் செல்லும் விதத்தில் உருவாகியுள்ளது இந்த படம்.

அறிமுக இயக்குநர் தேவன் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூலை 14-ம் தேதி மலையாளத்திலும், ஒரு வாரம் கழித்து கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த மலையாளப் படத்தினை கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் (KRG Studios) நிறுவனம் உலகம் முழுவதும்  வெளியிடுகிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் கார்த்திக் கவுடாவிடம் பேசியபோது, ‘‘இந்த படம் புதுமையான கதைசொல்லல் மூலம் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும் ஒரு அற்புதமான படைப்பாக இருக்கும்.

இந்த படத்திற்காக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவுடன் கைகோர்த்துள்ளேன். அவர் தெலுங்கில் படத்தை வழங்கவுள்ளார். அனில் ததானி இந்தியில் படத்தை விநியோகம் செய்யவுள்ளார். ஹோம் ஸ்கிரீன் என்டர்டெய்ன்மென்ட் (Home Screen Entertainment) மூலம் படத்தின் வெளிநாட்டு விநியோகம் செய்யப்படுகிறது. படம் உலகம் முழுதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here