இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடிக்கும் படம் ’13’. விவேக் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள்.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு 28.5. 2022 அன்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.
படத்தின் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ், படத்தை தயாரிக்கும் மெட்ராஸ் ஸ்டுடியோஸ் நந்தகுமார், இயக்குநர் விவேக், க்ஷ்கதாநாயகிகள் ஆதியா, பவ்யா, ஐஸ்வர்யா, காமெடி நடிகர் ஆதித்யா கதிர், இசையமைப்பாளர் சித்துகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் ஜி.வி. பிரகாஷ் பேசும்போது, ”என்.டி.ஆரோட 100 வது பிறந்தநாள்ல இந்த நிகழ்ச்சி நடக்குறது பெருமையா இருக்குல். இந்த படத்தோட தயாரிப்பாளர்கிட்டே ஒரு படம் பண்ணலாம்னு பேசி அட்வான்ஸ் வாங்குனது 2016-ல. சில காரணங்களால அந்த படம் பண்ண முடியலை. அப்படியே வருஷங்கள் ஓடிப்போய் இதோ 2022 வந்துடுச்சு. இடையில சில தடவை அட்வான்ஸை திருப்பி வாங்கிக்கோங்க சார்னு சொல்லியும் அவர் சம்மதிக்கலை. அதுக்கிடையில சில ஸ்கிரிப்ட் அனுப்பினார். எனக்கு ஒத்துவர மாதிரி தெரியலை. அதனால பண்ணலை. அப்புறம் சமீபத்துல ஒரு ஸ்கிரிப்ட் இருக்குனு சொல்லி அது ஹாரர் சப்ஜெக்ட்னு சொன்னார். ‘நான் அல்ரெடி ஹாரர் சப்ஜெக்ட்ல டார்லிங்’ படம் பண்ணிட்டேன். தவிர, ஒரே மாதிரி நிறைய பேய்ப் படங்கள் வருது. வாராவாரம் ஒரு படம் வருது. அதனால வேண்டாம்னு குறிப்பா ஹாரர் காமெடி சப்ஜெக்ட்னா வேண்டாம்’னு சொன்னேன். ‘இது அப்படியான கதையில்லை. நான் கதை கேட்டுட்டேன். நீங்களும் கதை கேட்டுப் பாருங்க. பிடிச்சா மட்டும் பண்ணுங்க’னு சொன்னார். சரின்னு சம்மதிச்சு டைரக்டர் விவேக் சொன்ன கதையைக் கேட்டேன். அவர் சொன்ன கதையும் கதைக்களமும் வழக்கமான பேய்ப்படமா இல்லைன்னு புரிஞ்சுது. இன்டர்நேஷனல் டிரீட்டா இருக்கும்னு தோணுச்சு. ஒத்துக்கிட்டு நடிச்சேன்.
டைட்டில் பொறுத்தவரை, 13ங்கிறது டைரக்டரோட விருப்பமா இருந்துச்சு. சிலர்கிட்டேயிருந்து 13 அன்லக்கி நம்பராச்சேனு பேச்சு வந்தப்போ… அப்டிலாம் எடுத்துக்க தேவையில்லை. என்னோட பர்த் டே ஜூன் 13 தான்னு சொல்லி சப்போர்ட் பண்ணேன்.
டைரக்டர் விவேக்கோட நடிகர், நடிகை தேர்வும் நல்லாயிருந்துச்சு. இசையமைப்பாளர் சித்து என்னைப் பொறுத்தவரை ரொம்ப லக். நான் நடிச்ச சிவப்பு மஞ்சள் பச்சை’, பேச்சிலர்’ படத்துக்கு அவர்தான் மியூஸிக். ரெண்டு படமுமே ஹிட். அதே மாதிரி இந்த படமும் ஹிட்டாகும்” என்றார்.
படத்தில் நடித்துள்ள ‘ஆதித்யா’ கதிர், ”ஏகப்பட்ட பேரை ஆடிஸன் பண்ணி, டைட்டானிக் படத்துல ஜாக் எப்படி கடைசியா டிக்கெட் எடுத்துக்கிட்டு உள்ளே வந்தாரோ அப்படித்தான் நான் இந்த படத்துக்குள்ள வந்தேன். சரி, டைட்டானிக் ஹீரோ மாதிரி ரோஸை உஷார் பண்ணேனான்னு கேட்டா அப்டிலாம் ஏதும் நடக்கலை. நான் டைரக்டரோட அன்பை உஷார் பண்ணேன். தயாரிப்பாளர் அவரோட அடுத்த படத்துல என்னை ஹீரோவோ போட்டு படம் பண்றேன்னு சொல்ற அளவுக்கு அவரை உஷார் பண்ணேன்.
ஹீரோ ஜி.வி. பிரகாஷ் அண்ணனோட ஒண்ணா கேரவன்ல அவரோட சாப்பிட்டுக்கிட்டு பேசிட்டிருக்கிற வாய்ப்பெல்லாம் கிடைச்சுது.
டைரக்டர் பத்தி சொல்லணும்னா நடிகர் விவேக் மரத்தை நட்டார். இந்த டைரக்டர் விவேக் மரத்துக்கு நடுவுல எங்களை விட்டார். ஆமா, பாரஸ்ட்க்குள்ள கொண்டு போய் விட்டார். அதுவும் நைட்ல ஷூட்டிங். சிலருக்கு சாயங்காலம் ஆறு மணிக்கு மேல கை நடுங்கும்ல. எங்க எல்லாருக்குமே நடுங்குச்சு. அந்தளவுக்கு பயங்கர குளிர். ஹீரோயின் ஆதியா, பவ்யாவுக்கெல்லாம் உடம்புக்கு முடியாம போச்சு. அதையெல்லாம் பொருட்படுத்தாம நடிச்சாங்க.
ஐஸ்வர்யா என்கூட சன் டி.வி.ல ஆங்கரா இருந்தவங்க. அவங்க இந்த படத்துல ஹீரோயின். பயங்கரமா பெர்ஃபாமென்ஸ் பண்ணிருக்காங்க” என்றார்.
தமிழ் சினிமா கதாநாயகிகளில் பெரும்பாலானவர்கள், பட விழாக்களில் ஆங்கிலத்திலேயே பேசிவரும் சூழல் சமீபமாக மாறியிருக்கிறது. பட விழாக்களில் கதாநாயகிகள் தமிழில் பேசுவது வழக்கமாகியிருக்கிறது. 13′ பட விழாவிலும் மூன்று கதாநாயகிகளில் இரண்டு பேர் தமிழில் பேசியது ஹைலைட் அம்சம்!