பாடகர் வேல்முருகன் பங்கேற்ற ‘அறமுடைத்த கொம்பு’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா! திருநெல்வேலியில் நடந்தது.

‘நெல்லை கீதம்’ ஜாக்சன்ராஜ் இயக்கிய ‘அறமுடைத்த கொம்பு’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, திருநெல்வேலி ஸ்ரீ செந்தில் வேல் திரையரங்கில் நடந்தது. நிகழ்வில் இசையமைப்பாளர் அல் – ருபியான், எடிட்டர் மணிக்குமரன், கதாசிரியர் வினோத்சிங், கதாநாயகன் ஆனந்த், கதாநாயகி ஜெசி மற்றும் கார்த்திக், கலைவாணன், ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

படத்தின் நான்கு பாடல்களை ஒரு தொகுப்பாக சிறப்பு விருந்தினர்கள் ஆவுடையப்பன், கபாலி விஸ்வந்த் இருவரும் வெளியிட,பிரபல பின்னணிப் பாடகர் வேல்முருகன் பெற்றுக் கொண்டார்.நிகழ்வின் தொடக்கத்தில் படத்தின் தயாரிப்பாளர் தங்கதுரை அனைவரையும் வரவேற்றார். இயக்குநர் ஜாக்சன் ராஜ் தொழில்நுட்பக் கலைஞர்களை அறிமுகப்படுத்தி அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கி நன்றி தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here