அளவுக்கு மீறினால் ஆப்பு கன்பர்ம்.
இந்த காலத்துக்கும் பொருந்தும் கருத்தை எடுத்துச் சொல்கிற ‘கார்மேனி செல்வம்.’
கார் டிரைவராகப் பணிபுரிகிற செல்வம் மனைவி, மகனுடன் வருமானத்துக்கேற்ற எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தான் ஓட்டும் காரில் பயணித்த ஒருவருடன் பேச்சுக் கொடுத்ததில், அவர் ‘பணக்காரனாகணும்னா முதல்ல பணக்காரனா வாழ்ந்து பழகணும்; அதுக்கு கடன் வாங்கணும்’ என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார். அதை சீரியஸாக எடுத்துக்கொண்ட செல்வம் கண்டபடி கடன் வாங்குகிறார். ஆடம்பர வாழ்க்கைக்கு பழகுகிறார்; தன் குடும்பத்தையும் பழக்குகிறார்.
செல்வத்தின் அந்த தகுதிக்கு மீறிய பழக்க வழக்கம் என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்குகிறது என்பதே மீதிக்கதை… இயக்கம் ராம் சக்ரி



