கண்ணில் கனவைச் சுமந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் கூட்டு உழைப்பால் உருவாகியிருக்கும் சஸ்பென்ஸ் திரைப்படம் ‘D 3.’
பிரஜின் கதாநாயகனாக நடிக்க, பாலாஜி எழுதி இயக்கியுள்ள இந்த படத்தை பீமாஸ் என்டர்டெயின்மெண்ட்’ மனோஜ்.எஸ் தயாரித்துள்ளார்.
வரும் மார்ச் 17-ம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள நிலையில், படம் பற்றி இயக்குநர் பாலாஜியிடம் பேசினோம்… “எந்த குற்றச் செயலைச் செய்பவனும் குற்றம் செய்த இடத்தில் ஏதாவது ஒரு தடயத்தை அவனை மீறி விட்டுச் செல்வது வழக்கம். இந்த படத்தின் கதையில் குற்ற நிகழ்வு நடந்த இடத்தில் குற்றவாளி ஒரு வார்த்தையை மட்டும் விட்டுச் செல்கிறான். அந்த வார்த்தைக்கான காரணத்தின் நுனி தேடி காவல்துறை மோப்பம் பிடித்துத் தொடர்ந்து குற்றத்தின் காலடித்தடயம் அறிந்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வழக்கை முடிப்பது தான் கதை.
D3 படப்பிடிப்பு பல்வேறு கட்ட சோதனைகளையும் தடைகளையும் தாண்டி நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பின் போது சண்டைக் காட்சிகள் தொடங்கிய அன்று நாயகன் பிரஜின் ஓட்டிய கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
படத்தின் காட்சிகள் பெரும்பாலும் கோவிட் காலத்தில் படமாக்கப்பட்டது. அப்போது படக்குழுவைச் சேர்ந்த 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதையும் தாண்டித்தான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. முகக்கவசம், கிருமிநாசினி, வெப்ப சோதனை என்று பல முன் எச்சரிக்கைகளைப் பின்பற்றி படப்பிடிப்பு நடந்தது.
இப்படம் ஒரு தொடர் படைப்பு ரீதியில் உருவாக்கி உள்ளது. இதன் முந்தைய 2 பாகங்கள் விரைவில் வெளியாகும்” என்றார்.
படக்குழுவினர்:
ஒளிப்பதிவு: மணிகண்டன் பி.கே. இவர் ஹன்சிகா நடிக்கும் ‘மேன்’ படத்தின் ஒளிப்பதிவாளர்.
இசை: ஸ்ரீஜித் எடவானா. இவர் இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்ற ‘மனம் ஒரு கொதிகலனா?’ பாடலுக்கு இசையமைத்தவர்.
கலை இயக்கம்: ஜெயசீலன்
ஸ்டண்ட்: ராம்போ விமல்
படத்தொகுப்பு: ராஜா ஆறுமுகம்

