7130 அடி உயர மலை கிராம மக்கள் கல்விக்காக, மருத்துவத்துக்காக படும் கஷ்டங்களை பதிவு செய்யும் ‘எவனும் புத்தனில்லை’ விரைவில் தியேட்டர்களில்!

மலை கிராம மக்களின் வாழ்க்கைச்சூழலை மையப்படுத்தி எஸ்.விஜயசேகரன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள படம் ‘எவனும் புத்தனில்லை.’

இந்த படத்தில் நபி நந்தி,சரத் கதாநாயகர்களாக நடிக்க, கதாநாயகியாக சுவாசிகா நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் சினேகன், பூனம் கவுர் நடித்துள்ளனர். வேல.ராமமூர்த்தி, நான் கடவுள் ராஜேந்திரன், சங்கிலிமுருகன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, முரு, ஆரு, கே.டி.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, பசங்க சிவக்குமார், சுப்புராஜ், எம்.கார்த்திகேயன், காதல் சரவணன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

‘வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ்’ நிறுவனம் அதிக பொருட் செலவில் இந்த படத்தை தயாரித்திருக்கிறது.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ‘‘7130 அடி உயரமுள்ள மலை கிராமத்தில் வாழும் மக்கள் கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் படும் இன்னல்களை மையமாக கொண்டு ஜனரஞ்சக படைப்பாக உருவாக்கியுள்ளோம். ஆக்‌ஷன், த்ரில்லர் கதைக்களம் என்பதால் படத்தில் ஆறு சண்டைக் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து விட்டது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது” என்றார்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
ஒளிப்பதிவு – ராஜா சி.சேகர்
இசை – மரியா மனோகர்
படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ்
பாடல்கள் – சினேகன்
வசனம் – எஸ்..டி.சுரேஷ்குமார்
கலை இயக்கம் – ஏ. பழனிவேல்.
ஸ்டண்ட் – அன்பறிவு, மிராக்கிள் மைக்கேல்
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, மணவை புவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here