கீதம் உணவகத்தின் 14வது கிளையை போரூரில் நடிகை நளினி திறந்து வைத்து வாழ்த்து!

சென்னையின் பிரபல சைவ உணவக சங்கிலி, கீதம் வெஜ், தனது 14வது கிளையை போரூரில் கடந்த ஜூன் 9ம் தேதி திறந்துள்ளது. பல்வேறு வகையான உணவுகளுக்காக பெயர் பெற்ற கீ தம், சென்னையின் அனைத்து மூலைகளிலும் உண்மையான சுவைகளை கொண்டு செல்லும் தனது பயணத்தைத் தொடர்கிறது.

போரூர் ஏரிக்கு அருகிலுள்ள இந்த புதிய கிளை, கீதத்தின் சிறப்பான அனுபவங்களை வழங்குகிறது. ஆரோக்கியமான உணவுகள், விரைவான சேவை மற்றும் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஏற்ற சூழ்நிலையில் அமைந்துள்ளது.

கீதத்தின் நிறுவனர் முரளி பேசியபோது “நல்ல உணவு மக்களை ஒன்றிணைக்கிறது என்பதை நாங்கள் எப்போதும் நம்புகிறோம். போரூர் என்ற இடம் நீண்ட நாட்களாக எங்கள் கவனத்தில் இருந்தது; இது வளர்ந்து வரும் குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதியாக திகழ்கிறது. எங்கள் 14வது கிளையை இங்கு தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.

திறப்புவிழா நிகழ்வில் நடிகை நளினி, சென்னை ஹோட்டல்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராம்தாஸ் ராவ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த கிளை தினமும் காலை 6 மணி முதல் இரவு 2 மணி வரை இயங்கும். 600க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் இங்கே வழங்கப்படுகின்றன. நண்பர்களுடன் நேரம் செலவிட, குடும்பத்துடன் மனநிறைவு தரும் உணவைக் அனுபவிக்க, அல்லது இரவு நேர சிற்றுண்டிக்காக போரூர் கீதம் அன்போடு வரவேற்கத் தயாராக உள்ளது.

கீதத்தின் ருசிகரமான உணவுகளை அனுபவிக்க அழையுங்கள்: +91 7397222 111

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here