புதிய பட நிறுவனத்தின் முதல் படமாக ‘காகங்கள்.’ கிஷோர், லிஜோமோல் ஜோஸ், விதார்த் நடிப்பில் உருவாகிறது!

வெவ்வேறு நம்பிக்கை கொண்ட மனிதர்கள் எவ்வாறு காகங்களால் ஒரு புள்ளியில் இணைகின்றனர்; ஒரு வாழ்வு எப்படி  இன்னொரு வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, இயற்கை தன் ‘மர்மமான முறையில்’ எப்படி பொதுவாழ்வை உந்திச் செல்கிறது, போன்றவற்றை வெளிப்படுத்தும் விதமாக கதை, திரைக்கதை, மற்றும் ஒளி – ஒலி வடிவங்கள் அமைக்கப்பட்டு உருவாகும் படம் ‘காகங்கள்.’இந்த படத்தில் கிஷோர், லிஜோமோல் ஜோஸ், விதார்த், குரு சோமசுந்தரம், யோகி பாபு, இளவரசு, உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘மாயவரம் பிக்சர்ஸ்’ முதல் படமாக இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் துவக்க விழாவோடு காகங்கள் படத்தின் பூஜையும் ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் நடந்தது.
பொங்கல் பண்டிகைக்கு பின்னர் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் நடைபெறவுள்ளது.
‘இலக்கிய செழுமையும், பண்பாட்டு சீர்மையும் நிறைந்த தமிழ் நிலத்தில், திரைப்படக் கலையில் புதிய அழகியல்களையும், முன்னெடுப்புகளையும் உருவாக்கும் நோக்கில் எங்களது பட தயாரிப்பு நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது’ என்றனர் படத் தயாரிப்பு நிறுவனத்தினர்.
படக்குழு:-
சரவணன் இளவரசுவின் ஒளிப்பதிவில், எம்.எஸ்.கிருஷ்ணாவின் இசையில், ராமு தங்கராஜின் கலை இயக்கத்தில், அந்தோணி பிஜே ரூபனின் ஒலி வடிவமைப்பில், டீனா ரொசாரியோவின் ஆடை வடிவமைப்பில் உருவாகும் இப்படத்தை ஆனந்த் அண்ணாமலை எழுதி, தயாரித்து, இயக்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here