Home சினிமா ஆன்லைன் சூதாட்டத்திற்கெதிராக உருவான ‘விழித்தெழு’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டார் நக்கீரன் கோபால்!

ஆன்லைன் சூதாட்டத்திற்கெதிராக உருவான ‘விழித்தெழு’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டார் நக்கீரன் கோபால்!

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருக்கும் தருணத்தில், அதே ஆன்லைன் சூதாட்டத்தின் ஆபத்துகளை எடுத்துக்காட்டும் விதத்தில் உருவாகியிருக்கிறது ‘விழித்தெழு’ திரைப்படம்.சமீபத்தில் நடந்த நிகழ்வில் இந்த படத்தின் டிரெய்லரை இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், ‘நக்கீரன்’ கோபால் இருவரும் வெளியிட்டனர்.

படம் பற்றி…

தமிழ்செல்வன் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

தொழில்நுட்பப் புரட்சி எந்த அளவுக்கு மக்களுக்கு சௌகரியத்தையும் வசதியையும் நேர சேமிப்பையும் அளிக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட.

நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனைகள் ஆன்லைனில் நடக்கின்றன. அதேபோல் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் நொடிப் பொழுதில் தங்கள் பணத்தை இழந்தவர்களும் ஏராளம்.

இப்படி ஆன்லைன் மூலம் பண இழப்பைச் சந்தித்தவர்கள் நம் அருகிலேயே இருப்பார்கள். இந்த நிலையில் அதன் தீமைகளை விவரித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது ‘விழித்தெழு.’

இந்த படத்தில் கதாநாயகனாக முருகா அசோக், கதாநாயகியாக காயத்ரி ரெமோ, பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி , வினோதினி, வில்லு முரளி ,ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம் ,நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ், அறிமுகம் லட்டு ஆதவன், கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஆதவன் சினி கிரியேஷன் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை சி எம். துரை ஆனந்த் தயாரித்துள்ளார். சிவகங்கை நகராட்சியின் நகர்மன்றத் தலைவராக உள்ள இவர், ஒரு பத்திரிகையாளரும் கூட. படத்தில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் பருந்துப் பார்வை பத்திரிகையாளராக நடித்துள்ளார்.

மதுரை மற்றும் சிவகங்கை சுற்றுப்பகுதிகளில் மிக பிரமாண்டமான முறையில் படப்பிடிப்பு நடந்து நிறைவடைந்துள்ளது.

படத்தில் மூன்று பாடல் காட்சிகள் மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்துள்ளன. இப்படத்தின் இசையமைப்பாளர் நல்லதம்பி கதைக்கேற்றபடி அழகாக இசையமைத்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் பற்றி பேச வந்திருக்கும் இந்தப் படம் காலத்துக்கேற்ற ஒரு படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பக் குழு:- எடிட்டிங் – எஸ் ஆர் முத்துக்குமார், ஸ்டண்ட் – எஸ் ஆர் ஹரிமுருகன், நடனம் – ஸ்டைல் பாலா, ஒளிப்பதிவு – இனிய கதிரவன், ஆ.சம்பத்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்