அருள்வாக்கு சொல்பவராக நடித்தவருக்கு நிஜமாக அருள் வந்த அதிசயம்! ‘முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் சுவாரஸ்யம்.

ராஜா முகம்மது இயக்கியிருக்கும் படம் ‘முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்.’

கதையின் நாயகனாக புதுமுக நடிகர் ஜெயகாந்த் நடித்திருக்கிறார். அவர், தமிழக கிராமத்து தெய்வங்களில் முக்கியமான தெய்வமான முனியாண்டியின் பக்தனாக, முனியாண்டி கோயிலில் குறி சொல்பவராக வருகிறார். முனி வேஷம் கட்டுவதற்கு தினமும் நான்கு மணி நேரம் மேக்கப் போட்டுக் கொண்டாராம்.

படப்பிடிப்பில் அவர் அருள்வாக்கு சொல்வதுபோன்ற காட்சியைப் படமாக்கும்போது, ஜெய்காந்த் நிஜமாக அருள் வந்து அவர் வாக்கு சொல்ல ஆரம்பிக்க, அதைக் கண்டு ஊர் மக்களும் படக்குழுவினரும் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

சிங்கம்புலி, முத்துக்காளை , மீராராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தில், வில்லனாக கொம்பன் பட வில்லனும் பிரபல சண்டைப்பயிற்சியாளருமான சூப்பர் சுப்புராயன் நடித்திருக்கிறார். பாடல்களை . கவிஞர் சினேகன் எழுதியிருக்கிறார்.

இந்த படம் ‘காந்தாரா’ படம் போல பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர்.

மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து, நிறைவுபெற்று பட வெளியீட்டுக்கான பணிகள் நடந்து வருகிறது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு – ஸ்ரீஆண்டாள் மூவீஸ் பி.வீர அமிர்தராஜ்
இசை – செளந்தர்யன்.
ஒளிப்பதிவு- ராம்குமார்
எடிட்டிங்- எஸ் பி அஹமத்
சண்டைப்பயிற்சி – பயர் கார்த்திக்
கலை- பத்மநாபன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here