அடிபட்ட வலியோடு நடித்த வில்லன்; முக்கிய பாத்திரத்தில் கே.ஆர். விஜயா! -‘மூத்தகுடி’ பட அனுபவம் பகிர்கிறார் இயக்குநர் ரவி பார்கவன்

‘சாவி’ படத்தின் கதாநாயகன் பிரகாஷ் சந்திரா தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் ‘மூத்தகுடி.’ ரவி பார்கவன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தின் அடிப்படையில், குடும்ப பின்னணியில், உணர்ச்சிகரமான படைப்பாக உருவாகும் இந்த படத்தில் பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் கதாநாயகன் தருண்கோபி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அன்விஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், ராஜ் கபூர், சிங்கம்புலி, யார் கண்னண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.1970 களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து 1970, 1990 மற்றும் நடப்பு காலகட்டத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் படக்குழு மிகுந்த ஆராய்ச்சி செய்து, அந்தந்த காலகட்டத்தை தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ளது. அப்போதைய காலகட்டத்தை மீண்டும் திரையில் பார்க்கும் ஒரு சிறந்த அனுபவமாக இப்படம் இருக்கும்.படம் குறித்து இயக்குநர் ரவி பார்கவன், ”உண்மை சம்பவத்தை மிக அழகான திரைக்கதையாக மாற்றியுள்ளேன். மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் அந்தந்த காலகட்டத்தில் பயன்படுத்திய பொருட்களை தேடிப்பிடித்து படத்தில் பயன்படுத்தியுள்ளோம்.

திரையில் நீங்கள் பார்க்கும் போது அந்த காலகட்டத்தில் வாழும் அனுபவத்தை தரும். மூத்த நடிகை கே ஆர் விஜயா அம்மா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது கேரவனே வேண்டாம் படக்குழுவினருடன் இருக்கிறேன் என்று எப்போதும் படப்பிடிப்பில் தான் இருந்தார். எல்லோருடனும் வெகு இயல்பாக நட்புறவோடு பழகினார். தருண் கோபி எதிர் நாயகனாக கலக்கியுள்ளார், அவர் தந்த ஒத்துழைப்பு மிகப்பெரிது. பிரகாஷும் அவரும் சண்டைக்காட்சி நடிக்கும் போது அவருக்கு அடிபட்டுவிட்டது. ஆனால் அப்போது கூட, படக்குழுவின் சிரமத்தை உணர்ந்து, படப்பிடிப்பை முடித்து விட்டே சென்றார். படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும்  மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். இப்படம் சமூகத்தின் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் ஒரு நல்லபடைப்பாக, ரசிகனுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்” என்றார்.‘அசுரன்’ படம் எடுக்கப்பட்ட, கோவில்பட்டி, திருநெல்வேலி, சாத்தூர், கயத்தாறு, எட்டையபுரம் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது பட வெளியீட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விரைவில் படத்தின் இசை, டிரெய்லர், திரையரங்கு வெளியீடு குறித்த விவரங்கள் வெளியாகும்.

படக்குழு:
தயாரிப்பு – பிரகாஷ் சந்திரா
இயக்கம் – ரவி பார்கவன்
இசை – J R முருகானந்தம்
ஒளிப்பதிவு – ரவிசாமி
படத்தொகுப்பு – வளர் பாண்டி
கதை வசனம் – M சரக்குட்டி
ஸ்டண்ட் – சரவெடி சரவணன்
பாடல்கள் – நந்தலாலா
எஃபெக்ட்ஸ் – சேது
டிசைன்ஸ் – அஞ்சலை முருகன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here