அப்போ டீச்சரம்மா, இப்போ ‘மிரியம்மா.’ கதைநாயகியாக ரீ எண்ட்ரி கொடுத்த ‘கடலோரக் கவிதைகள்’ ரேகா!

திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை ரேகா, இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக அழுத்தமான அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘மிரியம்மா.’

படத்தில் ரேகாவுடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக் ஆகியோர் நடிக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் பெண்களை மையப்படுத்தி இந்த படத்தை இயக்குவதோடு, படத்தை ‘72 ஃபிலிம்ஸ்’ எனும் பட நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடந்தது.

படத்திற்கு ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, இந்த திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரெஹைனா இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கமல் கவனிக்க, கலை இயக்க பணிகளை ‘யாத்திசை’ புகழ் ரஞ்சித் மேற்கொள்கிறார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here