உண்மைச் சம்பவத்தை கதைக்களமாகக் கொண்ட ‘மூத்தகுடி.’ பீரியட் படமாக உருவாகிறது!

‘வெல்டன்’, ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவி பார்கவன் திரைக்கதை எழுதி, இயக்கும் படம் ‘மூத்தகுடி’நடிகர் பிரகாஷ் சந்திராவின் ‘தி ஸ்பார்க்லேன்ட்’ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற ‘சாவி’ திரைப்படத்தையடுத்து அந்த நிறுவனத்தின் இரண்டாவது படமாக ‘மூத்தகுடி’ உருவாகிறது.

இப்படத்தில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், மற்றும் சாவி படத்தில் கதாநாயகனாக நடித்த பிரகாஷ் சந்திராவும், மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தருண்கோபியும் இணைந்து நடிக்கின்றனர். விசாகப்பட்டினத்தை சேர்ந்த அன்விஷா இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் ஆர். சுந்தர்ராஜன், ராஜ்கபூர், சிங்கம் புலி, யார் கண்ணன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா இணைகிறார்.

1970களில் கோவில்பட்டி அருகில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்குகிறார்கள். எனவே 1970 மற்றும் 1980களில் உள்ளது போன்ற இடங்களை தேர்வு செய்து படப்படிப்பு நடத்துகின்றனர். கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில், எட்டயபுரம், கயத்தாறு, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது

தொழில்நுட்பக் கலைஞர்கள்:-

ஒளிப்பதிவு – ரவிசாமி

இசை – சுரேஷ் முருகானந்தம் (அறிமுகம்)

படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஸ்

கதை வசனம் – எம் .சரக்குட்டி

பாடல்கள் – நந்தலாலா

சண்டைப்பயிற்சி – சரவெடி சரவணன்

மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here