புதிய படத்தில் வித்தியாசமான தோற்றம்… முழு வீச்சில் ‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு!

‘நைட்ரோ ஸ்டார்’ சுதீர் பாபு வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, கதாபாத்திரங்களின் நம்பகத்தன்மைக்காக உடலமைப்பில் மாற்றங்களையும் செய்து நடித்து வருகிறார். ஒவ்வொரு படத்திற்கும் அவரின் உடல் மொழி மற்றும் தோற்றப்பொலிவில் மாறுபாட்டை காணலாம்.
அப்படி அர்ப்பணிப்புடன் நடித்து வரும் ‘நைட்ரோ ஸ்டார்’ அடுத்ததாக ‘செஹரி’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ஞானசாகர் துவாரகாவுடன் இணைகிறார்.

இதற்கான அறிவிப்பு, வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட போஸ்டருடன் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தெற்கு மும்பையை சேர்ந்த அருண் கோலி என்பவரிடமிருந்து சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவருக்கு எழுதிய உள்நாட்டு கடிதமும், அதில், ‘அவசரம்: உங்களது வருகை அவசியமானது’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கடிதத்துடன் துப்பாக்கி, தோட்டாக்கள், பழைய ரூபாய் நோட்டு, தொலைபேசி மற்றும் சுருட்டு ஆகியவைகளும் இடம்பெற்றிருக்கிறது. இதனுடன் கிராமத்து சூழலின் பின்னணியில் ஆலயம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கூடவே, ‘அக்டோபர் 31-ம் தேதி மாஸான சம்பவம்’ என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

இது சுதிர்பாபுவின் பதினெட்டாவது திரைப்படம். தெய்வீக அம்சம் கொண்ட காலகட்டத்தை சார்ந்த அதிரடி கதைக்களம். கதை 1989-ம் ஆண்டில் குப்பம் எனும் ஊரில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. மண் மனம் கமழும் படைப்பு.

இந்த படத்தில், சுதீர் பாபு இதுவரை ரசிகர்கள் கண்டிராத வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார். இதற்காக தற்போது தன்னை முழுவீச்சில் தயார்படுத்திக் கொண்டு வருகிறார்.
இந்த படத்தை ஸ்ரீ சுப்பிரமணியேஸ்வரா சினிமாஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுமந்த் ஜி. நாயுடு பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here