நான்காண்டுகள் கடந்தும் உயிர்ப்போடிருக்கும் நடிகர் சிலம்பரசன் பாடிய ‘பெரியார் குத்து’ பாடல்! பெரியாருக்கு அர்ப்பணிக்க எதிர்காலத்தில் இன்னும் ஒரு பாடல் உருவாக்க இயக்குநர் தீபன் பூபதி திட்டம்.

தந்தை பெரியாரை பெருமைப்படுத்தும் விதமாக நடிகர் சிலம்பரசன் எஸ் டி ஆர். பாடி, நான்காண்டுகளுக்கு முன் வெளியான ‘பெரியார் குத்து’ பாடல் சென்சேஷனல் ஹிட்டாக மாறியது.

எழுச்சியூட்டும் அந்த பாடலை கார்க்கி எழுத, ரமேஷ் தமிழ்மணி இசையமைத்திருந்தார்.

அந்த பாடல் உருவான விதம், சந்தித்த சவால்கள், கிடைத்த வரவேற்பு, வெற்றி கொடுத்த மகிழ்ச்சிஎன பலவற்றை பற்றி பெரியாரின் பிறந்தநாளான இன்று (17.09.2023 / ஞாயிறு) பாடல் காட்சியை இயக்கிய தீபன் பூபதி நம்மிடம் பேசினார்…

”பாடலின் எழுச்சியூட்டும் வரிகள் பெரியாரின் அபிமானிகள் மத்தியில் நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்று எங்கள் குழு நம்பிக்கை வைத்திருந்தது. காரணம் பாடல் வரிகள் ஈர்க்கும்படி இருந்தன. இது பெரியாருக்கு எங்கள் தரப்பில் செலுத்தப்படும் சிறந்த அஞ்சலிகளில் ஒன்றாக இருக்கும் என்று நம்பினோம்.

எனது நீண்ட கால நண்பர் எஸ்.டி.ஆர் ஒரு நாள் எதேச்சையாக எங்கள் ஸ்டுடியோவுக்கு வந்தபோது, பாடல் வரிகளைக் கேட்டு பாராட்டு தெரிவித்தார். மட்டுமல்லாது பாடலைத் தானே பாடுவது மட்டுமல்லாமல் வீடியோவிலும் வருகிறேன் என உறுதி அளித்தார். சொன்னபடியே தன் பங்களிப்பைத் தந்தார். அது பாடலுக்குகூடுதல் பலமாக அமைந்தது.

பாடல் உள்நாட்டு பார்வையாளர்களின் இதயங்களை வென்றது மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் பெரும் வரவேற்பை பெற்றது. உலக அளவில் தமிழ்ச் சங்கங்களில் கிடைத்த பாராட்டுகளும் விருதுகளும் இந்தப் பாடல் உலகளாவிய பார்வையாளர்கள் மத்தியிலும் ஏற்படுத்திய தாக்கத்துக்கு சான்றாக நிற்கின்றன.

பாடல் வெளியானதிலிருந்து இன்று வரை கேட்டு அன்பும் ஆதரவும் கொடுத்த, கொடுக்கிற, பாடலை இன்றும் உயிர்ப்புடனும் துடிப்புடனும் வைத்திருகிற ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி! எதிர்காலத்தில் பெரியாருக்கு அர்ப்பணிக்க இன்னும் ஒரு பாடலை உருவாக்கதிட்டமிடுவேன்” என்றார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here