பாங்காங்கில் உள்ளூர் இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடிய ஸ்ருதிஹாசன்; சூப்பர் ஸ்டாரின் கூலி படப்பிடிப்புக்காக சென்றபோது அசத்தல்!

நடிகையும், பாடகியுமான ஸ்ருதிஹாசன், இந்த ஆண்டின் பிரமாண்டமான பிளாக் பஸ்டர் ஹிட்டாகும் படமாக கருதப்படும் சூப்பர் ஸ்டார் நடிக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பிற்காக தற்போது தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் படக்குழுவினருடன் முகாமிட்டிருக்கிறார்.

படப்பிடிப்பில் தன் பங்களிப்பை நிறைவு செய்த பிறகு ஸ்ருதி ஹாசனும், அவருடைய குழுவினரும் நகரத்தை வலம் வந்தனர். அந்தத் தருணத்தில் அங்கு நேரடியாக இசை நிகழ்ச்சி நடத்தும் கலை அரங்கத்தை பார்வையிட்டனர். பரபரப்பான சூழ்நிலையும், நேரடியாக இசைக் குழுவின் இசை நிகழ்ச்சியை முழுமையாக ரசிக்கும் கூட்டமும் அங்கு இருக்க, மகிழ்ச்சி அடைந்த ஸ்ருதிஹாசன் அவர்களை ஊக்குவிப்பதற்காக மேடையேறினார்.

அவருடைய இந்த தன்னிச்சையான முடிவிற்கு அங்கு கூடியிருந்த ரசிகர்களிடத்தில் ஆரவாரமான வரவேற்பு கிடைத்தது. அவரும் மேடை ஏறி பாடல்களை பாடினார். அதனை ஒரு மறக்க இயலாத மாலை நேரமாக மாற்றி அமைத்தார்.

அவர்களிடயே பேசும்போது, இந்த ஆண்டில் மேலும் சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here