நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனியின் மகன் ஹரி விக்னேஷ்வரன்
அறியா திசைகள் எனும் 40நிமிட குறும்படத்தை எழுதி, இயக்கி, நடித்துள்ளார்.
வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்பதே கதைக்களம். எதிர்பார்ப்பை உருவாக்கும் காட்சிகள், நறுக் சுறுக் வசனங்கள், பொருத்தமான இசை, பாராட்டும்படியான நடிப்பு என படம் ஈர்க்கிறது.
இந்த குறும்படம் பலரது பாராட்டுகளைப் பெற்று, சமூகவலைத்தளங்களில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.