பிரபுதேவா இதுவரை இந்தளவுக்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியதில்லை என்று சொல்லும்படி உணர்வுபூர்வமாக நடித்துள்ளதேள் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா 16. 11. 2021 அன்று சென்னையில் திரைப்பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். தூத்துக்குடி, மதுரை சம்பவம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, ஈஸ்வரி ராவ் இருவரும் அம்மா, மகனாக நடித்துள்ளனர். C.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நிகழ்வில், நடிகர் பிரபுதேவா பேசும்போது ”இயக்குநர் ஹரிகுமார் மிகச்சிறப்பான பணியினை செய்துள்ளார். இயல்பை விடவும் பலமடங்கு அற்புதமான உழைப்பை தந்துள்ளார். ரசிகர்கள் இது செட்டா இல்லை ஒரிஜினல் லொகேஷனா என சந்தேகப்படும் அளவு அற்புதமாக கலை இயக்கம் செய்துள்ளார்கள்.எனக்கு இந்த படத்தில் வசனங்கள் மிகவும் குறைவு. அதனால் முழு டப்பிங்கையும் அரை நாளில் முடித்துவிட்டேன். இசையமைப்பாளர் சத்யா இப்படத்திற்கு மிக சிறப்பான இசையை தந்துள்ளார்.ஞானவேல் ராஜா மிக அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அவர் உருவாக்கி வெளியிட்டு வரும் படங்கள், பல தயாரிப்பாளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. ஹரியும் நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள். இருவரும் நடன இயக்குனர்களாக பணியாற்றியிருக்கிறோம். இப்போது அவர் மீண்டும் புதிய தளத்தில் தன் திறமையை நிரூபிக்கவுள்ளார். உண்மையாகவே இந்த திரைப்படம் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இந்தப்படத்தில் எனக்கு நடன காட்சியே இல்லை. நான் இடது கை பழக்கம் கொண்டவனாக முதல் முறையாக நடித்திருக்கிறேன்” என்றார்.