தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் விழுப்புரம் – கள்ளக்குறிச்சி மாவட்டக் கிளைகளின் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள்!

வரும் ஜூன் 22 அன்று பிறந்தநாள் காணும் தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 70 கிளை மன்றம் திறப்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதன் முதல் கட்டமாக 05.06.2022 அன்று 24 கிளை மன்றங்கள் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அகில இந்திய விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர்  புஸ்ஸி என்.ஆனந்த் EXMLA அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் ஒன்றியம் நகரம் மற்றும் இளைஞரணி தொண்டரணி நிர்வாகிகள் ரசிகபெருமக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பொதுமக்களுக்கு புடவைகள், பிளாஸ்டிக் குடங்கள், மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், டிபன் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here