சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட குறும்படங்கள் வரிசையில் ‘போதைக்கு எதிரான போர்’ (War On Drugs) என்ற குறும்படம் உருவாகியுள்ளது.
போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்த இந்த குறும்படத்தை இன்று காலை, திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல்துறை டிஐஜி டாக்டர் இஸட். ஆனி விஜயா ஐபிஎஸ், டாக்டர் கே.எஸ். பாலகிருஷ்ணன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.
போதைப்பொருள் பழக்கம் நம் இளைய சமுதாயத்தை முற்றிலுமாக அழித்து கொண்டிருக்கிறது. சிறிதாக ஆரம்பமாகும் இப்பழக்கம் நம்மை அடிமையாக்கி நம் வாழ்வையே முற்றிலுமாக அழித்து விடுகிறது. போதைப்பழக்கத்தில் சிக்கிகொள்வோரை மீட்க அரசும் காவல்துறையும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு முயற்சியாக போதைப்பொருள் பயன்பாட்டின் கெடுதல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த குறும்படம் உருவாகியுள்ளது.
இந்த குறும்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நடித்துள்ளார். திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்தின் முன்னாள் இணை இயக்குனரான காகா எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை ஆர்.கே.ஜி. குரூப்பின் திரு. ஜி.சந்தோஷ் குமார் தயாரித்துள்ளார். கேபி இசையமைக்க, ஆதித்யா கோவிந்தராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தொழில்நுட்பக் குழுவில் தமிழ் அரசன் (எடிட்டர்), வி ஆர் ராஜவேல் (கலை), தியாகராஜன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வில்பிரட் தாமஸ் (கிரியேட்டிவ் குழு), M J ராஜு (ஒலி வடிவமைப்பாளர்), வீர ராகவன் (டிஐ கலரிஸ்ட்), வசந்த் (கன்ஃபார்மிஸ்ட்) , வி வேணுகோபால் (தயாரிப்பு மேலாளர்), திலக்ராஜ் எம் (தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்), வினோத் குமார் (ஒருங்கிணைப்பாளர்), சதீஷ் (விஎஃப்எக்ஸ்), சஜித் அலி (வசனங்கள்), யுவராஜ் (வடிவமைப்பு) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை மற்றும் ஆ.கே.ஜி. இன்ஃபோடெய்ன்மென்ட் (RKG Infotainment) இணைந்து, பொதுமக்கள் நலன் கருதி இந்த குறும்படத்தினை வெளியிட்டுள்ளனர்.