முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நகைச்சுவை நடிகராகவும், இடையிடையே சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வெற்றிகரமாக இரட்டைக் குதிரை சவாரி செய்து பிஸியாக இருப்பவர் யோகிபாபு.
அவர் இப்போது தான் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படதுக்கு முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார்!
இந்த படத்தை, ‘வில் அம்பு’ படத்தை இயக்கிய ரமேஷ் சுப்ரமணியம் இயக்குகிறார். லெமன்லீஃப் கிரியேஷன் சார்பில் ஆர் கணேஷ் மூர்த்தி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் பூஜை இன்று (3.10.2022) இனிதே நடைபெற்றது.
இந்த படத்தில் கதாநாயகியாக சம்ஸ்கிருதி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் பெப்சி விஜயன், கே.எஸ் ரவிக்குமார், மனோபாலா, சிங்கம்புலி, சிங்கமுத்து, மொட்டை ராஜேந்திரன், மயில்சாமி மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது விரைவில் தெரியவரும்.
படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற உள்ளது.
இதற்கு முன்னதாக லெமன்லீஃப் கிரியேஷன் நிறுவனம் தயாரிப்பில் புரொடக்சன் NO-1 ஆக உருவாகி வரும் ‘மலை’ படத்தில் யோகிபாபு மற்றும் லட்சுமி மேனன் இணைந்து நடித்துள்ளனர்
மேலும் இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் நிறுவனத்துடன் இணைந்து அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன் மற்றும் திவ்யா துரைசாமி ஆகியோர் நடிப்பில் புரொடக்சன் NO-2 ஆக உருவாகி வரும் படத்தையும் லெமன்லீஃப் கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
படக்குழு விபரம்:
கதை, திரைக்கதை, வசனம்: யோகிபாபு
இயக்கம்: ரமேஷ் சுப்ரமணியம்
ஒளிப்பதிவு: அதிசயராஜ்.R
கலை இயக்குனர்: S ஜெயச்சந்திரன்
படத்தொகுப்பு: மு.காசி விஸ்வநாதன்
ஆடை வடிவமைப்பு: முதுல் ஹபீஸ்
மேக்கப்: ஸ்ரீதர்
புரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ்: K.வீரமணி
நடன ஒருங்கிணைப்பு: தினேஷ் & சுரேஷ்
சண்டை பயிற்சி: FIRE கார்த்திக்
பாடலாசிரியர்: விவேக்
ஸ்டில்ஸ்: சந்தோஷ்
டிசைன்ஸ்: தண்டோரா சந்துரு
மக்கள் தொடர்பு: ரியாஸ் K.அகமது