Home பொது ‘ராமாயணம்’ திரைப்படத்தில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூரின் கேரக்டர் லுக் வெளியானது!

‘ராமாயணம்’ திரைப்படத்தில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூரின் கேரக்டர் லுக் வெளியானது!

‘ராமாயணம்’ திரைப்படத்தில் ராமராக நடிக்கும் ரன்பீர் கபூரின் கேரக்டர் லுக் வெளியாகியுள்ளது.
5,000 ஆண்டுகளாக மனிதகுலத்தின் நினைவில் வாழ்ந்து வரும் ராமர் கதாபாத்திரத்தை ரசிகர்களிடம் புதிய பார்வையில் உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட ‘ராமா’ டீசர் கொண்டு சேர்த்துள்ளது. ராமாயணம் கதையுடன் வளர்ந்தவர்களுக்கு இது புது அனுபவமாகவும், முதல் முறையாக அறிமுகமாகும் பார்வையாளர்களுக்கு பிரம்மாண்டமான அனுபவமாகவும் அமைகிறது.
இந்த காலத்தில் உலகம் காண்பதற்கு அரிய ஹீரோ ராமன். அதிகாரத்தை விட கடமையை தேர்ந்தெடுக்கும் ஹீரோதான் ராமன். ஆசையை விட தர்மத்தை முன்னிறுத்துபவர். ’மர்யதாம் புருஷோத்தம்’ என போற்றப்படும் ராமன், மனிதகுல ஒழுக்கத்தின் உச்ச வடிவமாக கருதப்படுகிறார். துன்பம், நாடுகடத்தல் மற்றும் இழப்புகளின் மத்தியில் கூட நேர்மை, கருணையை காக்கும் அவரது பண்பே அவரை காலத்தைக் கடந்தவராக மாற்றியுள்ளது.
இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் இயக்குநர் நிதேஷ் திவாரி பகிர்ந்து கொண்டதாவது, “ராமாயணத்தின் மகத்துவம் அதன் உணர்வு பூர்வமான தருணங்களில் உள்ளது. இது வெறுமனே நல்லது, கெட்டது பற்றிய கதையல்ல. மனிதன் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய கதை. ராமனின் பயணம் மிகவும் மனிதத்தன்மை கொண்டது. அதையே உண்மையாக காட்ட முயன்றுள்ளோம்” என்றோம்.
ராமர் கதாபாத்திரம் பற்றி நடிகர் ரன்பீர் கபூர் பகிர்ந்து கொண்டதாவது, “ராமரை பிரதிநிதித்துவப்படுத்த நான் வரவில்லை. அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவே வந்திருக்கிறேன். அவரின் எளிமையும் தூய்மையும் மிகவும் அரிதானவை. அதை புரிந்து கொள்ளும் பயணம் எனக்கு தெய்வீகமான அனுபவமாக இருந்தது” என்றார்.
தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “ராமரின் கதையின் வலிமை, அவர் எதை வென்றார் என்பதில் இல்லை. அவர் எதை கைவிட்டார் என்பதில்தான் உள்ளது. எளிதானதோ, வசதியானதோ அல்லாத, ஆனால் அவசியமான ஒரு தரத்தை ராமர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவர் ஆசையை விடக் கடமையையும், சுகத்தை விட உண்மையையும், தன்னலத்தை விட தியாகத்தையுமே முக்கியம் எனத் தேர்ந்தெடுக்கிறார். அதனால்தான் அவரது கதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. இன்றும் அது முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தொடர்கிறது”
நமித் மல்ஹோத்ராவின்‘ராமாயணம்’ திரைப்படம் பற்றி:
நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் ‘ராமாயணம்: பார்ட்1’ திரைப்படம், உலகின் மிகப் பழமையான காவியங்களில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இரண்டு பாகங்களாக உருவாகிறது. உலகம் உருவானதில் இருந்து மும்மூர்த்திகளும் மூன்று உலகங்களையும் ஆண்டு வருகின்றனர். அதாவது, பிரம்மா படைப்பையும், விஷ்ணு காத்தலையும், சிவன் அழித்தலையும் செய்து வருகின்றனர். விண்ணுலகமும் மண்ணுலகமும் குழப்பத்தை நோக்கிச் செல்லும் வேளையில், சமநிலையை நிலைநாட்ட மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணு மனித குல இளவரசனாக ராமர் (ரன்பீர் கபூர்) அவதாரத்தில் பூமியில் பிறக்கிறார். அறிவிலும் சக்தியிலும் ஒப்பற்ற அரக்க மன்னன் ராவணன் (யாஷ்) ராமருக்கு எதிராக நிற்கிறான். அகம்பாவம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்தால் இயக்கப்படும் ராவணனுடன் நடைபெறும் மாபெரும் மோதலும் அதன் பின்னான நிகழ்வுகளுமே ‘ராமாயணம்’. இராவணனை எதிர்த்து நிற்க விதிக்கப்பட்ட ஒரே எதிரி தான்தான் என்ற தனது உண்மையான நோக்கத்தை அறியாமல், இராமர் தர்மத்தின் சின்னமாகவும், அக்காலத்தின் மாபெரும் மனித வம்சமான அயோத்தியின் மிகவும் நேசிக்கப்பட்ட பட்டத்து இளவரசராகவும் திகழ்கிறார். ராமர் தனது மனைவி சீதா (சாய் பல்லவி) மற்றும் தம்பி லட்சுமணன் (ரவி துபே) உடன் அமைதியான வாழ்க்கையை வாழ முயலும் போது, விதி அவரை வனவாசத்திற்கும் இறுதி போருக்கும் அழைத்துச் செல்கிறது.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் ’ராமாயணம்’ திரைப்படத்தில் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். இருவருக்கும் உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில் இருவரும் எதிரெதிர் கதாபாத்திரங்களில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீதையாக சாய் பல்லவி, ஹனுமனாக சன்னி் தியோல், லட்சுமணனாக ரவி துபேவும் நடிக்கின்றனர். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இந்தப் படத்தை நிதேஷ் திவாரி, விருது பெற்ற திரைக்கதை எழுத்தாளர் ஸ்ரீதர் ராகவனால் தழுவி எழுதப்பட்ட கதையை மையமாகக் கொண்டு இயக்குகிறார். ஆஸ்கார் விருது வென்ற ஹன்ஸ் சிம்மர் மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் ஆகிய இருவரும் இசையமைக்கின்றனர். பழங்கால இந்தியாவை கண்முன் கொண்டு வரும் வகையில் தயாரிப்பு வடிவமைப்பை ரவி பன்சால் மற்றும் ராம்சே அவேரி பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளனர். சண்டை காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர்கள் டெர்ரி நோட்டரி & கய் நொரிஸ் வடிவமைக்கின்றனர்.
வால்மீகி ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிறது. நமித் மல்ஹோத்ராவின் முதல் பாகத்தை, எட்டு முறை அகாடமி விருது வென்ற தயாரிப்பு மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஸ்டுடியோவான DNEG மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து, பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் வழங்குகிறது.
நமித் மல்ஹோத்ராவின் ராமாயணா: பார்ட்1 திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளி, 2026ல் வெளியாகிறது. இரண்டாவது பாகத்தின் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் வேளையில் அடுத்த வருடம் 2027, தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.
சரியான நேரத்தில் மீண்டும் வரும் ‘ராமாயணம்’ கதை:
ராமாயணம் ஒரு கதை மட்டுமல்ல, அது வாழும் கலாச்சார சக்தி. போரில் வெற்றி பெற்ற பிறகு ராமர் அயோத்திக்கு திரும்பிய நாளே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அதாவது, இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியை குறிக்கும் நினைவாக கொண்டாடப்படுகிறது. ராமன் தர்மம், கருணை, தியாகத்தை பிரதிபலிக்கிறார். ராவணனின் வீழ்ச்சி அகம்பாவம் மற்றும் ஆசையின் விளைவாகும். இந்த எதிர்மறை, நேர்மறை மோதல்தான் ராமாயணத்தை மனித வரலாற்றின் நீண்ட காலம் நிலைத்த காவியமாக மாற்றியுள்ளது.
சுவாரஸ்ய தகவல்கள்:
* உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களிலும் பிராந்தியங்களிலும் 300க்கும் மேற்பட்ட பதிப்புகளில் ராமாயணம் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது.
* கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 13.5 கோடி பக்தர்களை ஈர்த்த ஆன்மீக தலமாக ராமர் பிறந்த அயோத்தி உள்ளது.
* கடந்த 2024 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட ராம் மந்திர் பல நூற்றாண்டு பாரம்பரியத்தின் அடையாளமாக திகழ்கிறது.
* அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் ராம் மந்திர் கும்பாபிஷேகத்தை கொண்டாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்