பசித்தவர்கள் தினத்தில் ‘ரெயின்ட்ராப்ஸ்’, ‘அனீபா பிரியாணி’ ஏற்பாட்டில் ஏழை மக்களுக்கு இலவச உணவு!

உலக பசித்தவர்கள் தினம் என்பது வறுமையால் பட்டினியில் வாடும் விளிம்பு நிலை மக்களின் உணவுத் தேவையை தீர்க்கும் விழிப்புணர்வு முயற்சி.

ஏழைகளின் பசியைத் தீர்க்க அரசு மற்றும் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பியிருக்க தேவையில்லை. மக்கள் ஒவ்வொருவரும் சமூகத்தை நோக்கி தங்கள் பங்களிப்பை அளித்து பசித்தவர்கள் இல்லாத தேசத்தை உருவாக்கும் அடிப்படையில் ‘ரெயின்ட்ராப்ஸ்’ அமைப்பும் ‘அனீபா பிரியாணி’ உணவகமும் இணைந்து உணவு வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. சென்னை கோயம்பேட்டில் உள்ள அனீபா பிரியாணி உணவகத்தில் இருந்து உணவு விநியோக வாகனம் புறப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நடிகர் அஸ்வின் குமார், அனீபா பிரியாணி உணவக நிர்வாக இயக்குநர் பாசித் ரஹ்மான் ஆகியோர் கொடியசைத்து உணவு வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

வாகனம் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று சாலையோரங்களில் பசித்திருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கியது.

கல்லூரி மாணவர்கள், ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் அறங்காவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உணவு விநியோகிப்பதில் உதவி புரிந்தனர்.

‘‘ரெயின்ட்ராப்ஸ் இது போன்ற நிகழ்சிகளை நடத்துவது இது முதல் முறையல்ல. ‘விருந்தாளி’ என்ற திட்டத்தின் மூலம் வாரந்தோறும் சாலையோர மக்களின் பசியை தீர்த்து வருகிறது. உலக பசித்தவர்கள் தினத்தை முன்னிட்டு அதிக அளவில் மக்களுக்கு உதவும் பொருட்டு வாகனம் மூலம் உணவு வழங்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது” என்றார் ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here