‘உறியடி’ ஹீரோவின் அதிரடி திரைப்படம்… படப்பிடிப்பு நிறைவு!

‘உறியடி’ படத்தின் இரண்டு பாகங்களிலும் கதாநாயகனாக நடித்து இயக்கிய விஜய்குமார், கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ்’  ஆதித்யா தயாரிக்க, அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தை மையமாகக் கொண்டு அறிமுக இயக்குநர் அப்பாஸ் அ. ரஹமத் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

விஜய்குமார் நடித்த ‘உறியடி 2’ படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்தது என்பதும், ‘சூரரைப் போற்று’ படத்தின் வசனத்தை விஜய்குமார் எழுதியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here